ஷா ஆலம், ஜூன் 11– மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அந்த ஆணை அமலில் இருக்கும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கோவிட்-19 சம்பவங்கள் இன்னும் அதிகமாக அதாவது தினசரி ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை சுகாதார அமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பரிந்துரைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.