ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 6,276 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,836 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 30- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 6,276 ஆக இன்று பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 6,437 ஆக இருந்தது.

சிலாங்கூரில் இன்று 2,836 பேருக்கு நோய்த் தொற்று கண்ட நிலையில் இதுவரை நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 751,979 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இந்த விபரங்களை வெளியிட்டார்.

சிலாங்கூருக்கு அடுத்து கோலாலம்பூரில் 625 சம்பவங்களும் ஜொகூரில் 299 சம்பவங்களும் சபாவில் 242 சம்பவங்களும் சரவாவில் 376 சம்பவங்களும் நெகரி செம்பிலானில் 644 சம்பவங்களும் கிளந்தானில் 159 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.

பேராக் (137), கெடா (226), மலாக்கா (223), பகாங் (210), திரங்கானு (20), லபுவான் (132), புத்ரா ஜெயா (11), பெர்லிஸ் (5) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


Pengarang :