சுபாங் ஜெயா, ஜூலை 27- ஸ்ரீ கெம்பாங்கான் தொழில்பேட்டைப் பகுதியிலுள்ள ஆறு வணிக மையங்களுக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவினர் கடந்த 22 ஆம் தேதி குற்றப்பதிவுகளை வழங்கினர்.
தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்றித் நடத்தக் தவறியதற்காக அந்த வணிக மையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக, வியூக நிர்வாகத் துறை துணை இயக்குநர் அஸ்ஃபரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.
அப்பகுதியிலுள்ள 20 வணிக மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக உரிமத்தை புதுப்பிக்காதது உள்பட பல்வேறு எஸ்.ஒ.பி. விதிமீறல் குற்றங்களை அதன் உரிமையாளர்கள் புரிந்தது இச்சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் மாநகர் மன்றத்தின் சட்டதிட்டங்களையும் அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.