சிப்பாங், அக 3- இங்கிலாந்து வழங்கிய 415,000 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை மலேசியா இன்று பெற்றது. பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் விரைவாக மேறகொள்ளப்படுவதற்கு இந்த தடுப்பூசி அன்பளிப்பு பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தடுப்பூசிகளை ஏற்றியிருந்த எமிரட்ஸ் ஏர்லைன்ஸ் இகே 346 விமானம் இன்று மாலை 2.20 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்ததடைந்தது.
அந்த தடுப்பூசிகளை பெறுவதற்கு தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், வெளியுறவுத் துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா, மலேசியாவுக்கான பிரிட்டிஷ் து தர் சார்ல்ஸ் ஹே ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.
மலேசியாவுக்கு தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கிய நான்காவது நாடு இங்கிலாந்து ஆகும். முன்னதாக ஜப்பான் 998,400 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளையும் அமெரிக்கா 10 லட்சத்து 350 பைசர் தடுப்பூசிகளையும் சீனா 500,000 சினோவேக் தடுப்பூசிகளையும் மலேசியாவுக்கு வழங்கியிருந்தன.