ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 20,889 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று

ஷா ஆலம், ஆக 6- நாட்டில் நேற்று 20,886 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டுள்ளது. நேற்று 20.596 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிலாங்கூரில் 8,792 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை 
தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதற்கு அடுத்த நிலையில் 2,483 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 1,371 சம்பவங்களுடன் கெடாவும் 1,291 சம்பவங்களுடன் சபாவும் 1,275 சம்பவங்களுடன் ஜோகூரும்  உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- 

கிளந்தான்(938), நெகிரி செம்பிலான் (986), பினாங்கு (776), பேராக் (624), பகாங் (610), சரவா (652), திரங்கானு(460), மலாக்கா (491), புத்ரா ஜெயா (121), லபுவான் (9), பெர்லிஸ் (9).


Pengarang :