ஷா ஆலம், ஆக 7- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 19,257 ஆக பதிவானது. கடந்த இரு தினங்களாக இந்த எண்ணிக்கை 20,000 பதிவாகியிருந்தது.
சிலாங்கூரில் நேற்று 8,792 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,084 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கோலாலம்பூரில் 2,450 கோவிட்-19 சம்பவங்கள் இன்று பதிவான வேளையில் கெடா, சபா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்கள் முறையே 1,514, 1,255 மற்றும் 1,182 சம்பவங்களைப் பதிவு செய்தன.
வழக்கமாக குறைவான நோய்த் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்து வந்த பெர்லிஸ் இன்று 41 சம்பவங்களுடன் திடீர் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
நெகிரி செம்பிலான் (884), பேராக் (774), பகாங் (714), சரவா