ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிராம வரிசைப்படி ஈஜோக் தொகுதியில் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம்

பெஸ்தாரி ஜெயா, ஆக 8- ஈஜோக் தொகுதிக்கான சிலாங்கூர் அரசின் செல்வேஸ் திட்டம் நேற்று கிராம வரிசை பிரகாரம மேற்கொள்ளப்பட்டது.

எட்டு பாரம்பரிய கிராமங்கள் மற்றும் இரு பாகான் கிராமங்களை உள்ளடக்கிய அத்திட்டம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  இட்ரிஸ் அகமது கூறினார்.

இந்த திட்டம் எளிதானதாகவும் முறையானதாகவும் இருந்ததோடு இதன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு கடந்த வாரம் முழுவதும் மனுபாரங்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், கிராமத் தலைவர் மற்றும் பெங்குளுவின் அங்கீகாரத்திற்கு பின்னர் அந்த பாரங்களை சமர்பித்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 2,600 தடுப்பூசிகளுக்கான கோட்டா முழுமை பெறுவதற்கு ஏதுவாக பிற்பகல் தொடங்கி மாலை வரை நேரில் வருவோருக்கு தடுப்பூசி செலுத்தும்  பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

 


Pengarang :