ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில்  46% பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

ஷா ஆலம், ஆக 14- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 46.1 விழுக்காட்டினர் அல்லது 21 லட்சத்து 90 ஆயிரம் பேர இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 58 லட்சத்து 70 தடுப்புசிகள் செலுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 70 ஆயிரம் ஆகும் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 276,926 தடுப்பூசிகள் மாநில மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

இதனிடையே, நேற்று  நாடு முழுவதும் 525,342 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள வேளையில் அவற்றில் 112,858 தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநில மக்கள் பெற்றனர் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.


Pengarang :