ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசித் திட்டம்: தொடக்கத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலம் மீது கவனம் செலுத்தப்படவில்லை- சுல்தான் வருத்தம்

ஷா ஆலம், ஆக 23- தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் மீது உரிய கவனம் செலுத்தப்படாதது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வருத்தம் தெரிவித்தார்.

தடுப்பூசித் திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் துரித வளர்ச்சி கண்டு வரும் தொழிலியல் பகுதியாக விளங்கும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஆரம்பக் கட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

இன்று காலை 14வது மாநில சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

 


Pengarang :