ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தகனச் சடங்குகளை விரைவுபடுத்த சிலாங்கூரில் 7 மின் சுடலைகள்- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், ஆக 27- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பலியான முஸ்லீம் அல்லாதோரின் உடல்களை விரைந்து தகனம் செய்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநிலம் தற்போது ஏழு மின்சுடலைகளைக் கொண்டுள்ளது.

ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றப் பகுதிகளில் தலா இரு மின்சுடலைகளும்  சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் சிப்பாங் நகராண்மைக் கழக பகுதிகளில் தலா ஒரு  மின்சுடலையும் உள்ளதாக லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தே சமயங்களுக்கான சிறப்பு செயல்குழுவின் தலைவர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

ஜெராம் மற்றும் ஈஜோக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக பகுதியில் இரு மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்கு விண்ணப்பம் கிடைத்துள்ள நிலையில் அதற்கான திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மின்சுடலைகளின் பற்றாக்குறை தொடர்பில் பலாக்கோங் உறுப்பினர் வோங் சியு கீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல லங்காட் மாவட்ட மன்றத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் துணை மாவட்டத்தில் உள்ள ஜாலான் செர்டாங் பெலா பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மின்சுடலையை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகவும் டத்தோ தெங் சொன்னார்.

 


Pengarang :