ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் அந்தாராபங்சா, பத்தாங் காலி தொகுதிகளில் நாளை நடமாடும் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், செப் 15- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை புக்கிட் அந்தாராபங்சா மற்றும் பத்தாங் காலி ஆகிய தொகுதிகளில் நடைபெறும்.

இந்த தடுப்பூசி இயக்கம் அம்பாங் பாய்ண்ட், டாத்தாரன் சந்தாய் மற்றும் பத்தாங் காலியில் உள்ள தொகுதி ஒருங்கிணைப்பாளர் சேவை மையம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் நோய்த் தடுப்பாற்றல் கொண்டு சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் மாநில அரசு இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் வெளிநாட்டினர் உள்பட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா வெளியிட்ட  சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் பண்டார் பாரு கிள்ளான், பத்து தீகா, தஞ்சோங் சிப்பாட், உலு பெர்ணம், கோம்பாக் செத்தியா, புக்கிட் அந்தாராபங்சா, பத்தாங் காலி, தெராத்தாய், டெங்கில், கம்போங் துங்கு ஆகிய 11 தொகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :