கோலாலம்பூர், செப் 27- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 10,959 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 13,104 ஆக இருந்தது. சிலாங்கூரில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 979 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சரவா மாநிலத்தில் இன்று 2,723 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நான்கு இலக்க நோய்த் தொற்றை பதிவு செய்த மற்றொரு மாநிலம் ஜோகூர் ஆகும். இம்மாநிலத்தில் 1,226 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- சபா - 751 கோலாலம்பூர்- 176 கெடா - 660 பினாங்கு-793 கிளந்தான் - 983 பேராக் - 713 நெகிரி செம்பிலான் - 110 பகாங் - 739 மலாக்கா - 346 திரங்கானு - 691 லபுவான் - 0 புத்ரா ஜெயா - 18
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1084273_PTJ08_03102020_KKM_BN202010021249-960x675.jpg)