ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில்  1,940 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 30- நாட்டில் இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று சற்று   அதிகரித்து   1,940 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலம் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,487 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,242), கிளந்தான் (1,232), கெடா  (1,033) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- 

சபா- 993
பேராக்– 913
பினாங்கு– 763
பகாங் – 697
திரங்கானு – 726
மலாக்கா– 194
கோலாலம்பூர் – 258
நெகிரி செம்பிலான் – 132
பெர்லிஸ் – 97
புத்ரா ஜெயா – 28
லபுவான் - 1

Pengarang :