HEADERADMEDIA STATEMENT

கோலக் கிள்ளான் தொகுதிக்கு 700 உணவுப் பொட்டலங்கள்- மந்திரி புசார் அலுலகம் வழங்கியது

ஷா ஆலம், அக் 1- கோலக் கிள்ளான் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்திற்கு 700 உணவுப் பொட்டலங்களை மந்திரி புசார் அலுவலகம் வழங்கியது.

அரிசி, சமையல் எண்ணெய், மீ, மாவு, சார்டின், சீனி, கெட்டிப்பால், கிச்சாப் போன்ற உணவுப் பொருள்களை அந்த பொட்டலங்கள் உள்ளடக்கியுள்ளதாக கோலக் கிள்ளான் உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொகுதி பிரதிநிதிகள் மூலம்  அந்த உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கபட்டன. இந்த உணவுப் பொருள்கள் அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

உதவி தேவைப்படும் கோலக் கிள்ளான் தொகுதி மக்களுக்கு வழங்குவதற்காக இந்த உணவுப் பொருள்களை வழங்கிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அத்தியாவசிய உணவு பொருள்களை தொகுதி சேவை அலுவலகத்தில் வழங்கி உதவலாம் என்றும் அவர் சொன்னார்.

வசதி குறைந்த குடும்பங்கள் உணவுப்  பற்றாக்குறையை எதிர்நோக்குவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. ஆகவே, உணவுப் பொருள் உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறோம். ஆகவே, அத்தகைய தரப்பினருக்கு உதவி வழங்க விரும்புவோர் எங்கள் அலுவலகத்தை  அணுகலாம் என்றார் அவர்.


Pengarang :