கோலாலம்பூர், அக் 3- நாட்டிலுள்ள பெரியவர்களில 87.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரத்து 495 பேர் நேற்று வரை இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும், 94.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்து 545 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 3 விழுக்காட்டினர் அல்லது 92,949 பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் அந்த அகப்பக்கம் தெரிவித்தது.
நேற்று நாடு முழுவதும் 211,517 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 89,695 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 121,822 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 505 ஆகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்ரவர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 109 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதன் வழி இந்நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,565 ஆக உயர்ந்துள்ளது.