ஷா ஆலம், அக் 11- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,709 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 45 ஆயிரத்து 303 ஆக பதிவுகியுள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று நாட்டில் 7,373 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.