MEDIA STATEMENTNATIONALPBT

அம்பாங் ஆற்றைத் தூய்மைப்படுத்த மாதந்தோறும் துப்புரவு இயக்கம்- ரோட்சியா வலியுறுத்து

ஷா ஆலம், அக் 25- அம்பாங் ஆறு தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய குறைந்தது மாதம் ஒரு முறையாவது துப்புரவு இயக்கத்தை மேற்கொள்ளும்படி வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கும் ஆற்றோர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் இந்த துப்புரவு இயக்கம் துணை புரியும் என்று அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

ஆறு என்பது இறைவனால் அருளப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். இன்றைய தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையின் நலனுக்காக அந்த ஆறுகளை முறையாக பாதுகாப்பது நமது கடமையாகும் என்று அவர் கூறினார்.

ஆகவே, வயது வேறுபாடின்றி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று பட்டு குறைந்தது மாதத்திற்கு  ஒரு முறையாவது ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

பொழுதை இனிதே கழித்தவாறு ஆற்றைச் சுத்தம் செய்யும் இயக்கத்தை நேற்று இங்குள்ள கம்போங் மிலாயு அம்பாங்கில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட துப்புரவு இயக்கத்தில் சுமார் 100 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :