ஷா ஆலம், நவ 1- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்டபட்டவர்களின் எண்ணிக்கை 4,979 ஆக குறைந்துள்ளது நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 5,854 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்த் தொற்று காரணமாக புதிதாக 44 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அவற்றில் நான்கு சம்பவங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தன. இந்த நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 28,876 உயிரிழந்துள்ளனர். நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணக்கையில் இது 1.17 விழுக்காடாகும். நாடு முழுவதும் இன்னும் 69,153 கோவிட்-19 சம்பவங்கள் தீவிரமாக உள்ள நிலையில் அவர்களில் 53,990 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 570 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
|
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/KKM-Tan-Sri-Dr-Noor-Hisham-Abdullah-960x644.jpg)