ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENT

சொந்தமாக நிர்மாணித்த நீச்சல் குளத்தில் குழந்தை மூழ்கியது.

 ஈப்போ, நவ. 7: தஞ்சோங் மாலிம் அருகிலுள்ள சிலிம் ரிவர் கம்போங் பாலுனில் உள்ள வீடு ஒன்றில் ஒரு குழந்தை குளத்தில் மூழ்கியதாக அறியப்படுகிறது.  நேற்று தனது வீட்டின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கியதாக கருதப்படும் சிறுவன் இன்று அதிகாலை உயிரிழந்தான்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை தனது இரண்டு வயது மகன் வீட்டில் இல்லாததை அவதானித்ததாகவும், காலை 9 மணியளவில் அவனை தேடிய பொழுது தனது வீட்டிற்கு அருகில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் தனது மகன் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாக கூறியதாக முவாலிம் பட்டண போலீஸ் தலைவர் சூப்ரிண்டன்  சுலிஸ்மி எபாண்டி தெரிவித்தார்.”

அவரது தந்தை குழந்தையை சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார், அந்த நேரத்தில்  குழந்தை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. “குழந்தையின் நிலைமை மோசமானக் காரணத்தால் மேல் சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எவ்வாறாயினும், இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக் குழந்தை உயிரிழந்து  விட்டதாக  வைத்தியரால் உறுதிப் படுத்தப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படும் என்று சுலிஸ்மி எபாண்டி கூறினார். போலீசார் இந்த வழக்கை திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தியுள்ளனர் மற்றும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


Pengarang :