ஷா ஆலம், நவ 14- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஐ.பி.சி பேரங்காடியுடன் இணைந்து மறுசுழற்சித் திட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு நடத்தி வருகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றம் கூறியது.
பயன்படுத்தப்பட்ட பொருள்களை பொது மக்கள் மறுபயனீடு செய்வதை ஊக்குவிப்பதற்கு இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
இன்றைய தினம் இந்த நான்கு நாள் நிகழ்வின் கடைசி தினமாகும். இன்று ஏற்பாடு செய்துள்ள இரு நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ளுங்கள் என பொது மக்களை அது கேட்டுக் கொண்டது.