ஷா ஆலம், நவ 14- கோலக் கிள்ளான், தாமான் சூரியா பெண்டாமார் பகுதியில் பழுதடைந்த பழைய குழாய்களை மாற்றும் பணியை ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
நீர் கசியும் நிலையிலிருந்த பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்களைப் பொருத்துவதை நோக்கமாக கொண்டு இந்த பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தாமான் சூரிய பெண்டாமார் அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் வசதிக்காக இந்த பழுதுபார்ப்பு பணியை விரைவாக மேற்கொண்ட ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
அந்த குடியிருப்பு பகுதியில் நிலவும் நீர் விநியோகப் பிரச்சனை தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக அஸ்மிஸாம், குடிருப்பாளர் பிரநிதிதிகள் மற்றும் ஆயர் சிலாங்கூர் அதிகாரிகள் கடந்த மாதம் அப்பகுதிக்கு வருகை புரிந்தனர்.