ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 6,380 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், நவ 18- நாட்டில் இன்று மொத்தம் 6,380 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று பதிவான 6,288 நோய்த் தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று புதிதாக பதிவான தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 69 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான முழு விபரங்களை   எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :