ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் இன்று 6,355 பேர் பாதிப்பு

ஷா ஆலம், நவ 19- நாட்டில்  கோவிட்-19 நோய்த்  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 6,355 ஆகப் பதிவாகியுள்ளது.

இதன் வழி நாட்டில் அந்த பெருந்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 75 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று இந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,380 ஆக இருந்தது என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவல் தொடர்பான தகவல்களை https://covidnow.gov.my   எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :