ஷா ஆலம், நவ 22- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றை விட சற்று உயர்வு கண்டு 4,885 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 4,854 ஆக இருந்தது.
இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் அந்த பெருந்தொற்றினா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 91 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை என்ற https://covidnow.moh.gov.my அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.