ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

சிலாங்கூரில் உள்ள 273 உணவகங்களுக்கு சுகாதார தரச் சான்றிதழ்

ஷா ஆலம், நவ 25- சிலாங்கூரில் மொத்தம் 273 உணவகங்கள் மலேசிய சுகாதார அமைச்சின் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியத்திற்கான அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றுள்ளன.

 இந்த எண்ணிக்கையில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவு விடுதிகள், பள்ளி கேன்டீன்கள், மருத்துவமனை கேன்டீன்கள் மற்றும் நடமாடும்உணவுக் கூடங்களும் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர்  டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் கூறினார்.

"உணவில் உள்ள கலோரி அளவை குறிப்பிடுவதன் மூலம்  உணவின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் தரத்தை பாதுகாக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியதோடு  86 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற உணவகங்களுக்கு வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த முயற்சியைத் தொடரும் அதேவேளையில் சுகாதாரத்தைப் பேணுவதில் மாநிலத்தில் உள்ள மற்ற உணவகங்களுக்கு முன்மாதிரியாக திகழும்படி சம்பந்தப்பட்ட உணவகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 உணவு மாசுபடும்  அபாயத்தைக் குறைப்பதிலும்  ஆரோக்கியமான உணவைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விரிவான தகவல்களை வழங்குவதிலும் இந்த சான்றிதழ்  திட்டம் முக்கியப் பங்கினை ஆற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  மலேசிய நிறுவன ஆணையம் மற்றும் அதன் துறைகளில் பதிவு செய்திருக்க வேண்டும். இது தவிர, சுகாதார அமைச்சின்  உணவுப் பிரிவு மற்றும் ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்திருக்க  வேண்டும் என்றார் அவர்.

Pengarang :