ஷா ஆலம், நவ 26- விவசாய நிலங்களை இதர நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான சிறப்பு பெர்மிட் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
குடியிருப்பு மற்றும் வர்த்தக நோக்கங்கள் தவிர்த்து சிறப்பு குடியிருப்பு அனுமதிக்கான பெர்மிட்டுகளையும் அரசாங்கம் வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு மேற்கொள்ளும் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்து தொழில் துறையினருக்கும் சரிசமமாகவும் சீராகவும் இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, கடந்தாண்டுடன் முடிவுக்கு வந்த சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதம் வரை 7 கோடியே 60 லட்சம் வெள்ளி வருமானமாகப் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.