MEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் சட்ட உதவி நிதி உருவாக்கம்

ஷா ஆலம்,நவ 29- சட்ட உதவி கிடைக்க முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  சட்ட உதவி நிதித் திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் எதிர்நோக்கும் குடும்ப வன்முறை மற்றும் வேலை நீக்கம் போன்ற பிரச்சனைளுக்கு சட்ட உதவி வழங்குவதை இந்த நிதித் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றம் மற்றும் சிலாங்கூர் சட்ட உதவி மையத்தின் உதவியுடன் அமல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி 2022 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :