ஷா ஆலம், நவ 29- வேலை இழப்பு காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் தொழிலாளர் செயலாக்க பிரிவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்திற்காக 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பி40 பிரிவினர் எதிர்நோக்கும் வேலை தொடர்பான பிரச்சனைகளை களைவதில் அரசு மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து அமலாக்க நடவடிக்கைகளை இப்பிரிவு மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, பி40 பிரிவினர் மத்தியில் தொழில்திறனை மேம்படுத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தொழில் திறன் பயிற்சிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.