பெட்டாலிங் ஜெயா டிச 5 ;- சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சியின் சார்பில் , பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் கோலகலமாக தொடங்கியது ” தீபாவளி கிறிஸ்துமஸ் ” சிறப்பு விருந்து நிகழ்ச்சியுடன் கூடிய கலை நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
உள்ளூர் கலைஞர்கள் சிறப்பாக பாடல்கள் பாடி வருகை தந்தவர்களை பரவச மூட்டினார்கள்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசா, ஶ்ரீ அண்டாலஸ் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்களுக்கு வலு சேர்க்கும் வண்ணம் சிலாங்கூர் மாநில மாவட்ட மன்ற உறுப்பினர்களும், இந்திய சமூக தலைவர்களும் ஏற்பாட்டு வேலையில் பம்பரம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.