ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

86.6 விழுக்காட்டு இளையோர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 7- நாட்டிலுள்ள 13 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 24 ஆயிரத்து 238 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 90 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 32 ஆயிரத்து 379 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 97.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 29 ஆயிரத்து 076 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 98.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 211 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 93,743 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 4,722 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 5,929 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 87,074 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :