ஷா ஆலம், டிச 9- நாட்டில் இன்று மொத்தம் 5,446 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 5,020 ஆக இருந்தது. புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 78 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார் கோவிட்-19 தொடர்பான முழு விபரங்கள்https://covidnow.moh. என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1084273_PTJ08_03102020_KKM_BN202010021249-960x675.jpg)