கூச்சிங், டிச 14- சரவா மாநிலத்தின் 12 தேர்தலுக்கான தொடக்க வாக்களிப்பு இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கின்றனர்.
இந்த தொடக்க கட்ட வாக்களிப்பில் 12,585 இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களும் அவர்களின் துணைவியரும் 10,458 போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் துணைவியரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த வாக்குப் பதிவு இன்று மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் மொத்தம் 349 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வரும் சனிக்கிழமை வாக்களிப்பு நடைபெறும்.