ECONOMYNATIONALPBT

வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்வதில் டீம் சிலாங்கூர் உதவி

ஷா ஆலம், டிச 25- டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 115 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கோல லங்காட், கிள்ளான், கோல சிலாங்கூர், சிப்பாங், பெட்டாலிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள எட்டு பகுதிகளில் இந்த துப்புரவு இயக்கத்தை கடந்த எட்டு நாட்களாக தாங்கள் மேற்கொண்டு வருவதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்ஷால் கெமான் கூறினார்.

காலை 8.45 மணி தொடங்கி கம்போங் லாமா, கம்போங் தஞ்சோங் சியாம், கம்போங் ஸ்ரீ தஞ்சோங்கில் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

இது தவிர, கிள்ளானிலுள்ள கம்போங் லொம்போங், டேசா சுபாங் பெராந்தாவ், தாமான் செத்தியா வாரிசான் அகிய இடங்களில் உணவு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ந்த இடத்தின் தேவைக்கேற்ப  20 முதல் 30 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் தொடங்கி இதுவரை துப்புரவு பணியில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :