ஷா ஆலம், டிச 29- வெள்ளம் பாதித்த பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக லோரிகள் மூலம் கொண்டுச் செல்லப்படும் பெரிய அளவிலான குப்பைத் தோம்புகள் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன.
இந்த குப்பைத் தோம்புகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி அதனைப் பயன்படுத்தலாம் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஷா ஆலம் மாநகர் மன்றமும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இந்த குப்பைத் தோம்புகளை தயார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ரோரோ வகை தோம்புகளை ஷா ஆலம் மாநகர் மன்றமும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேமெண்ட் நிறுவனமும் ஆங்காங்கே வைத்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக இவை இலவசமாக வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.