Penempatan mangsa banjir di Dewan SJK(C) Dengkil pada 20 Julai 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளம்- 5 துயர் துடைப்பு மையங்களில் 479 பேர் இன்னும் தங்கியுள்ளனர்

ஷா ஆலம், டிச 31– இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து தற்காலிக வெள்ள துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இம்மாதம் 18 ஆம் தேதி  ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் இந்த துயர் துடைப்பு மையங்கள் அமைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மையங்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 479 தங்கியுள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வழக்கத்திற்கும் மாறாக இரண்டு மடங்கு அதிக மழை பெய்த காரணத்தால் மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிக்கவும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பு செய்யவும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சித் திட்டத்தை அறிவித்தது.

 


Pengarang :