ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

2.28 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஜன 5- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை பெரியவர்களில் 97.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்து 434 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 87.7 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 60 ஆயிரத்து 090 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 90.6 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 51 ஆயிரத்து 195 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 241,595 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 2,844 பேர் முதல் டேஸ் தடுப்பூசியையும் 3,952 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 234,799 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 83 லட்சத்து 3 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 68 லட்சத்து 65 ஆயிரத்து 812 ஆகும்.

இதனிடையே, நேற்று கோவிட்-19 நோய்த் தொடர்பான 31 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.


Pengarang :