MEDIA STATEMENTNATIONAL

சீனப்புத்தாண்டு உதவித் திட்டங்களுக்கு பெக்காவானிஸ் வெ. 200,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 29- சீனப்புத்தாண்டை முன்னிட்டு 49 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வழங்குவதற்காக பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றம் 196,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிதியைக் கொண்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 30 பேருக்கு தலா 100 வெள்ளி வழங்கப்படும் என்று மன்றத்தின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

எஞ்சியத் தொகை இதர திட்டங்களுக்கு அல்லது உதவி பெறுவோருக்கு வேறு பொருள்கள் வழங்கப் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரை இலக்காக கொண்டு இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த மாதம் தொடங்கிய இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கை துவா, லெம்பா ஜெயா, கோம்பாக் செத்தியா உள்ளிட்ட தொகுதிகளுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சீனப்புத்தாண்டைக் கொண்டாடும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்க இந்த நிதியுதவித் திட்டம் துணை புரியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :