ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

88.6 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 29- நாட்டிலுள்ள பெரியவர்களில் 50 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரத்து 970 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாகார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அதே சமயம் 2 கோடியே 29 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 399 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 87 ஆயிரத்து 267 பேர் அல்லது 88.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகவும் 28 லட்சத்து 67 ஆயிரத்து 165 பேர் அல்லது 91.1 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 32 லட்சத்து 84 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 12 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :