கோலாலம்பூர், பிப் 1– சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் மற்றும் கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகல் 12.00 மணி வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என்பதோடு பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏறக்குறைய மணிக்கு 20 மில்லி மீட்டர் அளவு இடியுடன் கூடிய அடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அத்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியது. சரவா மாநிலத்தின் சிபு,முக்கா, பிந்துலு, மிரி ஆகிய பகுதிகளில் இதே போன்ற மோசமான வானிலை காணப்படும் என்றும் அத்துறை தெரிவித்தது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/FW1214970_SG01_18122021_BANJIR_KLANG-1536x989-1-960x618.jpg)