ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,234 ஆக உயர்வு

ஷா ஆலம், பிப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,234 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 5,720 ஆகப் பதிவானது.

ஒரே நாளில் 1,500 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. ஆகக் கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த உயர்ந்த பட்ச எண்ணிக்கை பதிவானது. கடந்த மாதம் இறுதி முதல் நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

"இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி நாட்டில் 7,234 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் வழி அந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 95 ஆயிரத்து 014 ஆக அதிகரித்துள்ளது" என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

Pengarang :