பெட்டாலிங் ஜெயா,பிப் 14: மக்களின் எதிர்கால திசை நோக்கிய கல்வித் திட்டங்களின் வெற்றிக்காக மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 7.8 கோடி வெள்ளி ஒதுக்கி வருகிறது.
மதம், இனம் மற்றும் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த உதவி விநியோகிக்கப்பட்டது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார். சீன தனியார் பள்ளிகளும் விதிவிலக்கல்ல, ஏனெனில் கல்வி அனைவருக்கும் முன்னுரிமை மற்றும் முக்கியமானது என்று டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூறினார்.
2016 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்த தனியார் பள்ளியின் உத்தரவாதத்திற்கும் (தொடர்ச்சிக்கு) RM500,000 வழங்குகிறோம்.
“நாங்கள் சீனப் பள்ளிகளுக்கு மட்டும் உதவுகிறோமா? இல்லை. 405 சமய ஆரம்ப பள்ளிகள், 114 க்கும் மேற்பட்ட சீன தேசிய வகை ஆரம்ப பள்ளிகள் மற்றும் 90 க்கும் மேற்பட்ட தமிழ் ஆரம்ப பள்ளிகளுக்கு உதவ எங்களிடம் 2.4 கோடி வெள்ளி உள்ளது,”என்று நேற்றிரவு சீன புத்தாண்டு 2022 கெஅடிலான் கட்சி விருந்தில் கூறினார். மேலும் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கட்சி தலைமையும் கலந்து கொண்டது. .
மாநில மக்களுக்கு அனைத்து உதவி செயல்முறைகளும் ஆதரவு வடிவங்களும் முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமைக்கு ஏற்ப வழங்கப்பட்டதாக அமிருடின் கூறினார்.
“எங்கள் உதவி தேர்தலுக்கு மட்டுமல்ல. அனுதாபத்தை ஈர்ப்பதற்காக அல்ல,ஆனால் திசையைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் சிலாங்கூர் குடும்பம். அனைவருக்காகவும் செயல்படுகிறோம். நான் மந்திரி புசாராக நியமிக்கப்பட்ட போது, தலைமை (கெஅடிலான்) எனக்கு அறிவுரை வழங்கியது, அனைவருக்கும் மந்திரி புசாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ”என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், அமிருடின் மாநிலத்தில் உள்ள 637 பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு உதவுவதற்காக RM2.4 கோடி நிதியை வழங்கினார். இந்த தொகையில் அகாமா ஆரம்ப பள்ளிக்கு RM98 லட்சம் (SRA), சீன தேசிய வகை ஆரம்ப பள்ளிக்கு RM90 லட்சம் மற்றும் தமிழ் ஆரம்ப பள்ளிகளுக்கு RM45 லட்சம் நிதியை உள்ளடக்கியது.