ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சுமார் 206,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர்,பிப் 15: நேற்றுவரை நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 206,748 பேர் அல்லது 5.8 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதள தரவுகளின் அடிப்படையில், நாட்டில் நேற்று  சுமார் 1 கோடியே 33 லட்சத்து 73 ஆயிரத்து 479 பேர் அல்லது 56.8 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.  மொத்தம் 2 கோடி 29 லட்சத்து 38 ஆயிரத்து 190 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர்.

இதுவரை, 12 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இளையோரில், மொத்தம் 27 லட்சத்து 96 ஆயிரத்து 21 பேர் அல்லது 89.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 75 ஆயிரத்து 825 பேர் அல்லது 92.5 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று நாட்டில் 149,888 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 38,738  பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 1,489 இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் மற்றும் 109,661 ஊக்க தடுப்பூசியையும் பெற்றனர்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியை 51 லட்சத்து 98 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக  நேற்று மொத்தம் 24 இறப்புகள் பதிவாகின. -பெர்னாமா


Pengarang :