ECONOMYPBTSELANGOR

“ஹிட்மாட் 100” தன்னார்வலர் குழு செந்தோசா தொகுதியில் உருவாக்கம்

கிள்ளான், பிப் 22- இளையோரை இலக்காகக் கொண்ட “ஹிட்மாட் 100” தன்னார்வலர் குழு  செந்தோசா தொகுதியில் அமைக்கப்பட்டது.

இந்தத் தன்னார்வலர் குழுவின் தொடக்க விழா செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் இங்குள்ள தாமான் கிள்ளான் ஜெயாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இளையோர் மத்தியில் உதவி மனப்பான்மையை வளர்ப்பது, தலைமைத்துவப் பண்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளையோரை  அடையாளம் காண்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில்  இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
பி.கே.ஆர். கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரு வாரங்களுக்கு முன்னர்த் தேசிய நிலையில் ஹிட்மாட் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர்  இத்திட்டத்தைச் சட்டமன்ற நிலையில் அமல்படுத்தும் முதலாவது தொகுதியாகச்  செந்தோசா  விளங்குகிறது.

இந்த தன்னார்வலர் குழுவினர் செந்தோசா தொகுதியில் மட்டுமின்றி நாட்டின் இதர பகுதிகளிலும் பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபடுவர்.


Pengarang :