ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பல மாநிலங்களில் சனிக்கிழமை வரை  மழை தொடரும்- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 23– வரும் சனிக்கிழமை வரை நாட்டின் பல மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் இந்நிலை நீடிக்கும் என்று அத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

பகாங் மாநிலத்தின் ஜெராண்டூட், மாரான், குவாந்தான், பெரா, பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட், குளுவாங், மெர்சிங் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :