ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தீயில் 15 எம்பிகே உணவுக் கடைகள் நாசம் உயிர்ச்சேதம் இல்லை

ஷா ஆலம், பிப் 24:  கிள்ளான்  ஜாலான் புசார் பண்டமாரன், போர்ட் கிள்ளானில் உள்ள  நகராண்மைக் கழகத்திற்கு (எம்பிகே) சொந்தமான மொத்தம் 15 உணவுக் கடைகள்  இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் அழிந்தது.

சிலாங்கூர்  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், கடைகளின் வரிசை சுமார் 80 சதவீதம் எரிந்துவிட்டது ஆனால் இந்தச் சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதிகாலை 3.14 மணிக்குச் சம்பவம் தொடர்பாகத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், போர்ட் கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) மற்றும் BBP ஸ்ரீ அண்டலாஸ் ஆகியவற்றின் 15 உறுப்பினர்கள் எட்டு நிமிடங்களில் அணைக்கும் நடவடிக்கைக்காக அந்த இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

“தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்படுத்த முடிந்தது, பின்னர் அதிகாலை 5.18 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :