ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,122 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு இட மாற்றம்

ஷா ஆலம், மார்ச் 8- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உள்ள ஒன்பது வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் 1,122 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 263 குடும்பங்கள் தற்போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தினர் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணியிலும் உதவி வருவதாக அவர் சொன்னார்.

நேற்று மாலை பெய்த அடை மழையில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

அந்த மூன்று மணி நேர மழையில் பண்டார் பாரு சுங்கை பூலோ, கம்போங் கோம்பாக் பத்து ஆராங், கம்போங் மிலாயு குண்டாங், கம்போங் மிலாயு சுங்கை செராய், பத்து ஆராங் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.


Pengarang :