ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரிக் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 31,490 சம்பவங்களாக உயர்ந்துள்ளன

ஷா ஆலம், மார்ச் 9: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று முன்தினம் 26,856 ஆக இருந்த நிலையில், நேற்று 31,490 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

இருப்பினும், டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா 31,315 பேர் அல்லது 99.44 விழுக்காட்டினர் அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் என விளக்கினார்.

“இன்று பதிவான சம்பவங்களில், 175 பேர் அல்லது 0.56 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

31,017 சம்பவங்கள் உள்ளூர் பரவலை உள்ளடக்கியதாகவும், மீதமுள்ளவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலான நோயாளிகள் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர், கட்டம் வாரியாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு –

1 ஆம் கட்டம்: 12,692 சம்பவங்கள் (40.30 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 18,623 சம்பவங்கள் (59.14 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 62 சம்பவங்கள் (0.20 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 52 சம்பவங்கள் (0.17 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 61 சம்பவங்கள் (0.19 விழுக்காடு)

நாட்டில் மொத்தம் 3,680,953 சம்பவங்கள் குவிந்துள்ளன.


Pengarang :