ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

இந்த வார இறுதியில் மூன்று தொகுதிகளில் மலிவான கோழி, முட்டை விற்பனை

ஷா ஆலம், மார்ச் 10: இந்த வார இறுதியில் மூன்று சட்டமன்றச் சேவை மையங்களில் மக்கள் உதவி விற்பனைத் திட்டம் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களைப் பெறலாம்.

சம்பந்தப்பட்ட இடங்களில் மார்ச் 12 அன்று பண்டான் இன்டா சமூகச் சேவை மையமும், ஞாயிற்றுக்கிழமை சுங்கை துவா மற்றும் கோம்பாக் செத்தியா தொகுதிகளும் அடங்கும்.

விற்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் RM12 விலையில் நடுதரமான கோழி, புதிய திடமான (மாட்டு) இறைச்சி ஒரு கிலோவுக்கு RM35, கிரேடு B முட்டைகள் ஒரு தட்டு (30 மூட்டைகள் கொண்டது) RM10 மற்றும் கானாங்கெளுத்தி அல்லது செலாயாங் பேக்கிற்கு RM8 என பட்டியலிடப்பட்டுள்ளது.

“நாம் அனைவரும் கோழி, இறைச்சி, கோழி முட்டை மற்றும் மீன்களை அங்கே மிக மலிவான விலையில் வாங்குவோம்” என்று சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகம் (PKPS) பேஸ்புக்கில் கூறியது.

முன்னதாக, பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 64 பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரயிறுதியிலும் இந்த முயற்சியானது ஹரி ராயா பெருநாள் வரை தொடரும் என்றும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் வேறு சில அன்றாடத் தேவைகள் சேர்க்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

மொத்தம் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மற்றும் 315,000 கிரேடு பி முட்டைகளும் இந்த நிகழ்ச்சியின் போது விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

 


Pengarang :