ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் 31 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 12 – நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்றைய நிலவரப்படி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 1,119,954 சிறார்கள் அல்லது 31.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் அடிப்படையில், நாட்டில் 1 கோடியே 52 லட்சத்து 38 ஆயிரத்து 78 பேர் அல்லது 64.8 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 29 லட்சத்து 33 ஆயிரத்து 696 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 290 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரத்து 698 பேர் அல்லது 91.1 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 35 ஆயிரத்து 797 பேர் அல்லது 94.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

நேற்று, மொத்தம் 58,326 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, 23,938 முதல் டோஸாகவும், 1,678 இரண்டாவது டோஸாகவும், 32,710 பூஸ்டர் டோஸாகவும், தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 76 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 


Pengarang :