ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 64.9 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 13- நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 493 பேர் அல்லது 64.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 34 ஆயிரத்து 341 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 853 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

மேலும், 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 30.4 விழுக்காட்டினர் அல்லது 11 லட்சத்து 44 ஆயிரத்து 379 பேர் அல்லது 32.2 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து  36 ஆயிரத்து 325 பேர் அல்லது 91.2 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 29 லட்சத்து 36 ஆயிரத்து 489 பேர் அல்லது 93.4 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

.இதனிடையே, நேற்று 46,688 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 25,471 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,047 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 20,170 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சத்து 13 ஆயிரத்து 082 ஆக உயர்ந்துள்ளது.

 


Pengarang :